திருவள்ளூர் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

     கொசுவால் பரவும் நோய்களை தடுக்க திருவள்ளூரில் நகராட்சி சார்பில் 17 தினங்களாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
   டெங்கு உள்ளிட்ட கொசுவால் நோய் பரவி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள   நோயாளிகளின் வீடு அமைந்துள்ள பகுதிகளில் சுகாதாரம் நிலை குறித்து அறிய மூன்று குழுக்களை நகராட்சி நியமித்துள்ளது. அந்த பகுதிகளில் நோய் மேலும் பரவாமல் தடுக்க இந்த குழுக்கள் சுகாதார பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு மருத்துவர்களின் உதவியுடன் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
                                                                      
                  -இணைய செய்தியாளர்-சந்தரகுமார்